பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பவுள்ள அஜித் ரோஹன!

0

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன பூரணமாக குணமடைந்துள்ளார்.

இதனடிப்படையில் இன்னும் சற்று நேரத்தில் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன அவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி வீடு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தான் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது விரைவாக குணமடைய பிரார்தித்த அணைவருக்கும் நன்றியையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு போலியான புகைப்படங் களை பயன்படுத்தி தான் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் போலியான பிரசாரம் செய்தவர்கள் தொடர்பில் தான் மிகவும் வருத்தம் அடைவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply