வர்த்தகத் துறை அமைச்சர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

0

தற்போது நாட்டில் நிலவும் கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் நிலை காரணத்தால் பல்வேறு நகரங்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

இதற்கமைய நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையத்தை தொடர்ந்தும் திறந்து செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு வர்த்தகத் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணத்தால் முழு நாட்டுக்கும் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் மையமாக புறக்கோட்டை வியாபார சந்தையில் செயற்படுகின்றது.

மேலும் எந்த ஒரு வர்த்தக நிலையத்தையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அத்தியாவசிய வர்த்தக நிலையத்தை திறந்து இருக்க வேண்டும் என வர்த்தக துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply