வேகக் கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்குள்ளான கனரக வாகனம்!

0

கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் அருகாமையில் கனரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி கடை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் மூலம் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் கடையின் முன்புறம் மற்றும் அருகில் இருந்த மின்கம்பம் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply