6 மீன்படி படகுகள், இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளது!

0

திருகோணமலை மாவட்டத்தின் நாவற்சோலை கடற்கரைப்பகுதியில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மீன்படி படகுகள், இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளதாக குச்சவெளி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய குறித்த சம்பவத்தில் 4 படகுகள் முற்றாக எரியூட்டப்பட்டுள்ளதுடன் 2 படகுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

மீனவர்களுக்கு இடையிலான பகையே இதற்குக் காரணம் என காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை குச்சவெளி காவற்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply