வத்தளை பிரதேசத்தில் நாளைய தினம் 12 மணித்தியால நீர் விநியோக தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த நீர் விநியோக தடை நாளை காலை 10 மணி முதல்அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வத்தளை, ஹெந்தலை, எலக்கந்தை, அல்விஸ் நகரம், வெலிக்கந்த முல்லை, கெரவலப்பிட்டி, மாபொல, ஹூனுப்பிட்டி, வெலிக்கந்தை பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



