இலங்கையில் இன்று நள்ளிரவுக்கு பின்னர் அமுலாகும் புதிய சட்டம்!

0

கொவிட் 19 தொற்று பரவல் மற்றும் டெல்ரா தொற்று பரவல் காரணத்தினால் இன்று நள்ளிரவுக்கு பின்னர் மறு அறிவித்தல் வரையில் வீடுகளிலும் மண்டபங்களிலும் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் குறித்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நிகழ்வின் போது மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன் அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும் மற்றும் சாட்சியாளர்கள் இருவருமே பங்கு கொள்ள முடியும்.

மேலும் இந்நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு இவர்களைத் தவிர வேறு எவருக்கும் அனுமதி இல்லை என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply