தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம்!

0

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலேயே இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் குறித்த இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு 17,18 திகதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை அண்டி உள்ள,மாவட்டங்கள் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 19,20 ஆம் திகதிகளில் கடலோர மாவட்டம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிருதுவான மலையில் பெய்யும்.

அத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதுடன் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இந்நிலையில் இன்றும் நாளையும் குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும், தென்மேற்கு வங்கக் கடலை அண்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசும்.

ஆகவே குறித்த பகுதிகளுக்கு மீனவர்களின் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply