பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன் அண்மைக்காலமாக பலரை கொச்சைப்படுத்தி பேசிய வீடியோவை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அவரின் ஆண் நண்பருடன் சேர்ந்து குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேசி வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார்.
இதன் அடிப்படையில் அவரின் மீது பல தரப்பினர் காவல்துறையினருக்கு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.