கொவிட் தொற்றின் தாக்கம் மிக வேகமாக பரவி வகிருகின்ற நிலையில் முக கவசம் அணியாமல் வெளியில் நடமாடுபவர்கள் தொடர்பில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்
மேலும் பொதுவிடங்களில் முகக் கவசம் இன்றி நடமாடும் நபர்கள் பிடி ஆணையின்றி கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.