இறைச்சி உற்பத்தியாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக தகவல்!

0

நாட்டில் கடந்த வருடத்தில் இறுதிக் காலப்பகுதியில் இருந்து இறைச்சி கோழிஉள்ளிட்ட இறைச்சி வகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

இதனால் உற்பத்தியாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நாட்டில் விலங்குகளுக்கான உணவு வகைகளை வழங்குவதில் தாம் சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிட்டு இருந்தனர்.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் விலங்கு உணவுகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் குறிப்பிட்டிருந்தனர்..

இதன் பிரகாரம் உற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ளதோடு எதிர்பார்த்த வருமானத்தைப் பெற முடியாமல் உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

Leave a Reply