கொழும்பில் சில பகுதிகளில் நாளைய தினம் 9 மணி நேர நீர் விநியோகம் தடை செய்யப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஒருகொடவத்த -அம்பத்தல வீதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாகவே குறித்த நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு, 12 13 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலே குறித்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும்.
அத்துடன் நாளை முற்பகல் 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



