இலங்கையில் சீரற்ற காலநிலை – மக்களுக்கு எச்சரிக்கை.

0

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலைகாரணமாக அட்டன் கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .

அட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன நகரத்தில் மரத்துடன் கூடிய மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முச்சக்கர வண்டியொன்றின் மீதும் லொறி ஒன்றின் மீதும் இந்த மரம் முறிந்து விழுந்துள்ளதுடன் மண் திட்டொன்றும் முற்றாக சரிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த காரணத்தினால் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் மரத்தை மற்றும் மண்சரிவையும் அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலை நிலவி வருவதால் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply