அண்மையில் இணையவழி ஊடாக 15 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய சம்பவம் ஒன்று பதிவானது.
இதன் பிரகாரம் குறித்த சிறுமியை இணைய வழியாக விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட நான்கு இணைய தளங்களையும் உடனடியாக முடக்குமாறு நீதிமன்றம் தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதற்கமைய குறித்த உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அலுவலகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த இணையதளங்களை முடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.