யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

0

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கல்லுண்டாய் வீதியில் குடைசாய்ந்துள்ளது.

இதன்போது போரூந்தில் பயணித்த பலர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் வேகமாக வந்த பஸ் மழை காரணமாக சறுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply