மேல் மாகாணத்தில் இன்று முதல் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக கொவிட் 19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இதற்கமைய சமூகத்திலுள்ள வயோதிபர்கள், நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் பலவீனமானவர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படுள்ளது,
இந்நிலையில் முதற்கட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்பினை ஏற்படுத்தி முற் பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இராணுவ நோய்த்தடுப்பு மற்றும் மனநல மருத்துவர் பணியகத்தின் 1906 அல்லது 011 28 60 002 ஆகிய இலக்கங்களிற்கு தொடர்பு மேற்கொண்டு முற்பதிவினை செய்வதனூடாக இந்த தடுப்பூசிகளை வீட்டிலேயே இருந்தவாறு செலுத்திக் கொள்ள முடியுமென கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயற் பட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது



