18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசி!

0

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு இம்மாதத்தின் இறுதிப்பகுதியில் முதலாவது தடுப்பூசி ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் மான பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 96 விதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது ஏற்றும் பணி நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தினங்களில் பெருந்தொகையான தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply