4 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா வைத்திருந்த இரு நபர்கள் கைது.

0

மன்னார் , இலுப்பை கடவாய் பகுதியில் 4 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா வைத்திருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரவூர்தி ஒன்றில் மீன்கள் கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்து மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 131கிலோ 725 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply