இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!

0

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து விதமான விசாகளினதும் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய குறித்த நீடிப்பு நேற்று முதல் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.

இந்த தகவலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த காலப்பகுதியில் காலாவதியாகும் விசாக்களுக்கு அக்கால பிரிவிற்கான வீசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும் என்பதுடன் எந்தவிதமான தண்டப்பணமும் அறவிடப்படும் மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வதிவிட வீசாவை வைத்திருப்பவர்கள் அதற்குரிய திகதியை நடித்த கொள்ள கிழமை நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.30மணி வரை 070-7101050 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி நாள் ஒன்றையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதுடன் செப்டம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் அதனைப் புதுப்பித்து கொள்ள வேண்டும் எனவும் குறித்த திணைக்களத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply