உலக சந்தையில் பால்மா விலை அதிகரித்துள்ளதால் நாட்டில் பால்மா விலை அதிகரிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் குறித்த கோரிக்கை நுகர்வோர் அதிகார சபையினால் நிராகரிக்கப்பட்டதாக பால்மா இறக்குமதி யாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையினால் தங்களது இறக்குமதி தடைபட்டுள்ளதாகவும் அதன் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதன் காரணத்தினால் சந்தையில் பால் மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் கப்பலுக்கான செலவு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி என்பனவும் இதில் செல்வாக்குச் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச சந்தையில் ஒரு கிலோ பால் மா 4.20 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் அரசாங்கத்தின் நிர்ணய விலையில் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால் மாவுக்கு 270 ரூபா நட்டம் ஏற்படுவதாக பால்மா இறக்குமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



