தமிழக அரசின் வருமானம் மிகவும் சரிந்து விட்டதால் எல்லா நிலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என இன்று வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 2006-2011ஆம் ஆண்டு தி. மு. க ஆட்சி காலத்தில் போது தமிழக அரசின் வருமானம் உபரியாக காணப்பட்டது.
இந்நிலையில் 2011-16 இல் வருமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
குறித்த பற்றாக்குறை 2016 -21 இல் 1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் பிரகாரம் நிதிப் பற்றாக்குறையும் பல மடங்கு உயர்ந்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
த்துடன் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசு அதிகளவில் கடன்களை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் வருவாய் குறைந்து விட்டதால் நிதி நிலைமை மோசமாகியுள்ளது.
இந்நிலையில் 2020 -21 இல் மாத்திரமே இந்த வருவாய் பற்றாக்குறை ரூபா,61.320 கோடியாக உள்ளது.
கடந்த 5 ஆண்டில் பொதுக் கடன் 3 லட்சம் கோடியாக காணப்பட்டது.
மேலும் இடைக்கால பட்ஜெட்டில் போது 4.85 லட்சம் கோடி நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் 5.24 இலட்சம் கோடி நிதி பற்றாக்குறை தற்போது இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



