காதலருடன் சேர்ந்து சாதி குறித்து படுமோசமாக பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை! கிழித்து தொடங்கவிடும் நெட்டிசன்கள்..

0

தமிழ்சினிமாவில் தன்னை சூப்பர் மாடல் என்று கூறி சமீபகாலமாக சர்ச்சையாக பேசி சிக்கி வைரலாகி வருபவர் நடிகை மீரா மிதுன். 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய பின் மாடலிங் போட்டியை ஆரம்பித்து சில மோசடி பிரச்சனையை ஏற்படுத்தினார் மீரா மிதுன். இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் எதிர்ப்புகளுக்கும் வெறுப்புகளுக்கும் ஆளாகினார்.

சமீபத்தில் நடிகர் சூர்யா, விஜய் அவர்களின் மனைவிகளை பற்றியும் நடிகை திரிஷா, நயன்தாராவையும் இழிவாக பேசியும் வந்தார். இதற்கு காரணம் அப்சரா என்கிற திருநங்கையால் தான் இப்படி நடந்து காரணம் என்று கதையை மாற்றினர். இதேபோல் இசையமைப்பாளரின் மகளாக பிரபலமாகி பின் முன்னணி பாடகியாக கலக்கி வரும் தீ-ஐ பற்றி அவதூறாக பேசினார்.

தன் முகத்தை தீ காபி செய்து வருவதாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதைதொடர்ந்து தற்போது குறிப்பிட்ட எஸ் சி சாதியினரை சேர்ந்த நடிகர்க்களையும் இயக்குநர்களையும் துறத்த வேண்டும் என்று அவரது ஆண் நண்பருடன் சேர்ந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டு பரபரப்பைஏற்படுத்தியுள்ளார் மீரா மிதுன். இதனை பார்த்து நெட்டிசன்கள் கண்டபடி மோசமாக திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

Leave a Reply