நாட்டில் தற்போது டெங்கு நோய் தொற்றின் தாக்கம் தீவிர அபாயத்தை ஏற்படுத்தி வருவதாக விசேட வைத்தியர் எம். ஆர்ன்ல்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் நாட்டில் கொவிட் தொற்றின் தாக்கம் தீவிர பெற்று வருகின்ற நிலையிலும் டெங்கு நோய் தொற்றும் அதிகரித்துள்ளதால் நாட்டில் சுகாதாரத் துறை யினருக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இதுவரையான காலப்பகுதியில் இந்தவருடத்தின் 17,134 பேர் டெங்கு நோய் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 3,292 டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.



