சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான பல தகவல்கள்!

0

கொழும்பு நகரின் சில பகுதிகளை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தற்போது சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான பல தகவல்கள் வெளியாகிவருவதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் கவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய வெள்ளவத்தை, தெஹிவளை, நுகெகோட, கல்கிசை மற்றும் நிதி மிரிஹாணை போன்ற பகுதிகளிலேயே குறித்த தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிசை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply