கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்படு வைத்தியலசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

0

நாட்டில் காணப்படும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளிலும் கொவிட் 19 தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த வைத்தியசாலைகளில் பாரியளவிலான நெருக்கடிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் இது குறித்து நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தை சுகாதார அமைச்சர் தலைமையில் நடக்கும் படியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் இன்றைய தினம் நடைபெற நாடாளுமன்ற அமர்வின்போதே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும் குறித்த கோரிக்கைக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சரும் , சபை முதல்வருமான தினேஷ் குணவர்த்தன , இன்றைய தினத்தில் அரசாங்கம் இந்த விடயத்திற்கு பதில் வழங்கும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply