மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தொடர்பில் வெளியான அறிவிப்பு!

0

மாகாணங்களுக்கிடையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போக்குவரத்து செயற்பாடுகளில் அத்தியாவசிய காரணங்கள் தவிர்ந்த வேறு காரணங்களுக்காக மாகாண எல்லைகளை கடக்கும் நபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அத்தியாவசிய தேவை அல்லாது மாகண எலையைக் கடந்து செல்ல முற்பட்ட பலரும் கடந்த சில தினங்களில் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து செய்யற்படுகள் அரச சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மாத்திரமே திறக்கப்பட்டுள்ளது..

மேலும் நெருங்கிய உறவினர்களின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதற்கும் அனுமதி வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply