அதிபர் ,ஆசிரியர் தொழிற்சங்கங்கத்தினரின் வாகன பேரணி ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய வேதனை பிரச்சினைகள் உள்ளிட்ட தமது கோரிக்கைகளை உடனடியாகவே நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டு குறித்த சங்கத்தினரால் நான்கு பகுதிகளில் இருந்து வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகன பேரணிகள் பயணிக்கும் பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.
இதற்கமைய குறித்த வாகன பேரணி இன்று முற்பகல் நீர்கொழும்பு வீதியின் வெலிசரை, கண்டி வீதியின் கடவத்த அதிவேக வீதி நுழைவாயில், அத்துடன் ஹை லெவல் வீதியின் கொட்டாவை, காலி வீதியில் மொரட்டுவை ஆகிய பகுதிகளிலேயே ஆரம்பமாகியது.
இவ்வாறு இடம்பெறும் பேரணி கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



