தற்போது நாட்டில் டெங்கு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதற்கமைய குறித்த டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை கண்டறிவதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கண்டி மோப்ப நாய்கள் பிரிவின் ஜொனி மற்றும் ரோமா ஆகிய இரண்டு நாய்களுக்கும் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் சுற்றாடல் பிரிவு காவல்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு குறித்த மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.



