வத்தளை பிரதேசத்தின் சில பகுதிகளிலே இன்று 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கெந்தல பாலத்தினூடாக நீர் குழாய் பொருத்துதல் மற்றும் பிரதான நீர்க்குழாயுடன் இனைக்கும் பணிகள் காரணத்தாலே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
மேலும் வத்தளை நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதி, மா போல, வெலிக்கட முல்ல , மருதனை வீதி, புவக்வத்த வீதி, கெரவாலபிதிய வீதியின் வீதியின் ஒரு பகுதி, கலகஹதுவ, ஹெந்தல வீதியின் நாயக்க கந்த சந்தி வரை அனைத்து கிளை வீதிகள் மற்றும் அல்விஸ் நகர ஆகிய பகுதிகளுக்கும் குறித்த நீர் வெட்டுஅமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



