யாழில் கொவிட் -19 சீனோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மிகவும் சுறுசுறுப்பாக இடம்பெற்றுவருகிறது.

0

கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட்-19 சீனோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மிகவும் சுறுசுறுப்பாக இடம்பெற்றுவருகிறது.

தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள மக்கள் ஆர்வமாக வருகை தருவதை அவதானிக்க முடிந்தது.

அதே வேளை சில கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மக்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் பின்னடித்து வருகின்றனர்.

அவர்களது கிராமத்தில் இருந்து தொலைவில் தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் அமைந்திருப்பதும் ஒரு காரணமாக அமைந்துள்ளதே இதற்கு காரணம் எனவும் தமது கிராமங்களில் பொது இடத்தில் ஏற்பாடுகளை மேற்கொண்டால் தமக்கு பெற்றுக் கொள்ள முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply