கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேச எல்லைகள் ஒடுங்கி வரும் அபாய நிலை!

0

கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேச எல்லைகள் ஒடுங்கி வரும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதற்கான எல்லையை நிர்ணயம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் இதில் பிரதேச செயலாளர் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும் என தேசிய விடுதலை மக்கள் முண்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்துள்ளார்.

இதுவரைக்கும் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எல்லைகள் சரிவர எல்லை இடப்படாத காரணத்தால் நாளுக்கு நாள் பரப்பளவு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மறுபுறம் மணல் அகழ்வும் கடலரிப்பும் பரப்பளவை குறைத்து வருகிறது. இது சம்பந்தமாக கிண்ணியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதேச செயலாளரும் இணைந்து இதற்கான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்மேலும் தெரிவித்துள்ளார் .

Leave a Reply