கொவிட் தொற்றின் தாக்கத்தின் மத்தியிலும் தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று கடந்த மே மாதம் மு .க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில் இவர் பதவி ஏற்ற சமயத்திலிருந்து தமிழகத்தில் கொவிட் தொற்றின் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது.
அத்துடன் தமிழக அரசு சார்பில் இந்த கொவிட் தொற்றின் தக்காதினை குறைப்பதற்கு தீவிர செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் அங்கு கொவிட் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது..
இதன் காரணமாகவே அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தில் பல்வேறு தளர்வுகள் இடம்பெற்றது.
அத்துடன் தமிழகத்தில் தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு வருகின்ற 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் தற்போது வரை பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் ஆகிய இடங்களைத் திறப்பதற்கு இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் குறித்த ஊரடங்கு உத்தரவை நீடிப்பது குறித்தும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பிலும் சென்னை தலைமையகத்தில் மு .க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், தலைமை செயலாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



