யாழில் காதலி மீது கத்தி குத்து தாக்குதல் -காதலனின் கொடூரமா செயல்!

0

யாழ்ப்பாணம் – குருநகரில் அமைந்துள்ள வடக்குமாகான கட்டிடங்கள் தினைக்களகத்தில் நேற்று 12.30 மணியளவில் அங்கு வேலைசெய்யும் ஆண் ஒருவர் அங்கு அதே அலுவலகத்தில் வேலைசெய்யும் சக உத்தியோகத்தரை கத்தியால் தலையிலும் முகத்திலும் குத்திவிட்டு குளியல் அறையில் உட்தாப்பா போட்டுவிட்டு உள்ளே இருந்துவிட்டார்.

அங்கு இருந்தவர்கள் காயப்பட்ட பெண்ணை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைபிரிவில் சேர்த்துள்ளனர் சம்பவத்தை அறிந்த சிவில் உடையில் வந்த பொலிஸார் உடனே வந்து அவரை வெளியில் வருமாறு அழைத்துள்ளனர் அதனை செவிமடுக்காது இருக்க பொலிஷாருடைய தொலைபேசி கமராவில் உள்ளே நிலமையினை அறிய முற்பட்ட பொழுது அந்த விடியோவில் பார்த்த பொழுது இரத்த வெள்ளத்தில் இருப்பதினை பார்த்து உடனே கதவினை உடைத்து அவரை மீட்டு அலுவலகவாகனத்தில் எடுத்து சென்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

பின்னர் விசாரனையை மேற்கொண்ட பொலிஷார் அந்த பெண் மாணிப்பாயை சேர்ந்தவரும் விவாகரத்துமாணவர் இவரை அதே அலுவலகத்தில் இருந்த ஆண் உத்தியோகத்தர் புலோலியை சேர்ந்தவர் இவர் அந்த பெண்ணை விரும்புவதாக தொல்லை கொடுத்து வந்துள்ளார் ஏற்கனவே மாணிப்பாய் பொலிஸ்ஷில் முறைப்பாடு போட்டு அந்த குறித்த நபரை பொலிஷார் எச்சரிக்கை பண்ணி அணுப்பியுள்ளனர்.

இரண்டு கிழமையில் இந்த பிரச்சனை அலுவலகத்தில் இன்று இடம் பெற்று
அவர் கத்தியினை கொண்டு கண்மூடிதனமாக குத்திவிட்டு குளியல் அறையில் சென்று இன்னொரு கத்தியினால் தனது வயிற்று பகுதியில் குத்தியும் கிளித்துள்ளார் அவரை சரியான நேரத்தில் வந்து பொலிஷார் மீட்டுள்ளனர் காயப்பட்ட பெண்ணும் அந்த ஆணும் அதிதீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள் அந்த அணின் மேசை லாச்சியுள் இன்னும் இரண்டு கத்தியும் ஒரு கூரிய ஆயுதமும் மீட்டுள்ளனர் சம்பவத்தினை யாழ்ப்பாண குற்ற தடுப்பு பிரிவினர் மிகுதிவிசாரையினை மேற்கொண்டு வருகிறார்கள்
முரண்பாட்டு சம்பவம் ஏற்கனவே அலவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதற்கான நடவடிக்கையினை மேல் உயர்அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் இப்படியான சம்பவங்கள் இடம் பெறுகிறது இவர்கள் கடமை நேரங்களில் மக்களுக்கு சேவை செய்யாது ஒரு சிலர் அலுவலகத்தில் வேலைசெய்யும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள்
இது உயர் அதிகாரியின் கவனயீனமாகும்

Leave a Reply