படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்!

0

காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.

இதற்கமைய குறித்த காவல்துறை உத்தியோகத்தர் அவரின் தங்கும் இடத்தில் உள்ள படுக்கையில் இருந்தே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் 45 வயதான அனுராதபுரத்தை சேர்ந்த சார்ஜண்ட் ஜயசேகர இந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது கடமையை முடித்துவிட்டு நேற்று இரவு யாழ் பண்ணையிலுள்ள காவல் தங்கும் இடத்திற்கு சென்று உறக்கத்திற்கு சென்றார்.

அதன் பின்பு இவர் இன்று காலை கடமைக்கு செல்வதற்காக காலை 5.30 மணிக்கு சக காவல்துறை உத்தியோகத்தர்கள் தட்டி எழுப்ப முயன்ற போது உயிரிழந்துள்ளமை தெரியவந்தது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply