வடக்கு மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன கடமையினை பொறுப்பேற்றார்.

0

வடக்கு மாகாண பிரதமர் செயலாளராக சமன் பந்துல சேன இன்று 11:40 சுபநேரத்தில் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சமன் பந்துலசேன ஜனாதிபதியினால் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் வடக்கு மாகாணத்திற்கு பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமைக்கு தமிழ் அரசியல் தரப்புக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையில் இன்று தனது கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply