இரு தடுப்பூசிகளை ஒரே தடவையில் செலுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைஅறிக்கை இன்று கையளிப்பு!

0

கண்டி – உடபேராதனை பகுதியில் பெண்ணொருவருக்கு இரண்டு தடுப்பூசிகள் ஒரே தடவையில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் ஒரே தடவையில் இந்த இரண்டு தடுப்பூசிகளை செலுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று கண்டி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த விசாரணை அறிக்கை ஆராயப்பட்டதன் பின்பு குறித்த விடயம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் நிஹால் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மத்திய மாகாணங்களின் சில தடுப்பூசி மத்திய நிலையங்களின் செயற்பாடுகளை அவதானிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply