நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாகத் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறிப்பாக மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடு பூராகவும் மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
அவ்வாறு மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ,ஹம்பாந்தோட்டை ,மன்னார் ,வவுனியா ,கிளிநொச்சி மற்றும் திருகோணமலை, ஆகிய மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கரித்து காணப்படும்.
மேலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சந்தர்ப்பம் நிலவுகிறது.
அத்துடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற் பரப்புகளும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
ஆகவே பொது மக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்பகங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



