இங்கிரிய – பாதுக்க பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய வீதியின் குறுக்காக பயணித்த மாடு ஒன்றுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி கவிழ்ந்து, பின்னர் டிப்பர் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் உட்பட அதில் பயணித்து ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இங்கிரிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



