யாழில் இடம்பெற்ற மற்றுமொரு வாள் வெட்டு தாக்குதல்!

0

யாழ் இணுவில் காரைக்கால் பகுதியில் வாள் வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த குழுவினர் மகனை தேடி வந்த நிலையில்ல வீட்டில் மகன் இல்லாத காரணத்தினால் தாய் மற்றும் தந்தையை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கோப்பாய் காவல் துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஜெயக்குமாரி ஆகிய இருவருமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply