நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய மேலும் 980 பேரே இவ்வாறு குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து அவர்களின் மொத்த எண்ணிக்கை263,758 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



