யாழ்ப்பாணம் பருத்தித்துறை, வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கசிப்பு வடிப்பதற்கான கோடா மற்றும் கசிப்புவடிப்பதற்குரிய உபகரணங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த நபர் பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது செயப்படுள்ளார்.
இந்நிலையில்இந்த நபர் மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து வல்லிபுரகுறிச்சி பகுதியில் சுமார் 65 லீற்றர் கோடா மற்றும் உபகரணங்களை மறைத்து வைத்திருந்த வேளையில் பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



