41 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை கேரள கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

0

இந்தியாவில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்க படும் 41 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை கேரள கஞ்சா இலங்கை கடற்படையினரால் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய யாழ்- தொண்டைமானாறு பிரதேச கடற்கரை பகுதியில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 139 கிலோ 100 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதியே இவ்வாறு மீட்கப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அவற்றை இலங்கை கடற்படையினர் கரையில் வைத்து தீயிட்டு அளித்துள்ளனர்.

எனினும்இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கேரள கஞ்சா வைக்கப்பட்டிருந்த படகு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply