யாழிலிருந்து சுற்றுலா சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

0

யாழிலிருந்து தனது நண்பர்களுடன் கிளிநொச்சி கௌதாரி முனைக்கு சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய குறித்த நபர் நண்பர்களுடன் கௌதாரி முனைக்கு சுற்றுலா சென்று கடலில் குளித்த போது உயிரிழந்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணம் மீசாலை சாலை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய தபாலக உத்தியோகத்தரை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் கடலில் மூழ்கியவரை நண்பர்கள் மீட்டு பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இடையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply