போதைப் பொருள் வைத்திருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்!

0

திருகோணமலை தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நபர் திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு பல இரகசிய தகவலையடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் திருகோணமலை – மட்கோ, மஹமாயபுரம் பகுதியை சேர்ந்த ஏ. துலாஜ் மதுசங்க என்ற 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபர் சிறைச்சாலையில் கடமையாற்றி வரும் ஜெய்லர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply