புகையிரத திணைக்களத்தினுள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய புகையிரத போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக புகையிரத ஓட்டுனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
அத்துடன் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளைப் போன்று தற்போது புகையிரத கொவிட் கொத்தணி உருவாகும் சந்தர்ப்பம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது வரையில் ஒரு நாளுக்கான 20-25 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டுக்காட்டியுள்ளார்.