கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!

0

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்திலுள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

இதற்கமைய குறித்த குழந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்தனர்.

இந்நிலையில் அந்தக் கிணற்றின் சுற்றுச் சுவரில் அதிக அளவில் பாரம் ஏற்பட்டதால் அதன் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

குறித்த கிணற்றை சுற்றி நின்ற 15க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் தமது பணிகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் கிணற்றிலிருந்து காயமடைந்த நிலையில் பலர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் தொடர்ச்சியாக கிணற்றுக்குள் சிக்கியிருந்த 15 பேரையும் மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply