2 கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி!

0

2 கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட சுற்றுலா பயணிகள் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலாவது தினத்தில் மேற்கொள்ளப்படும் பி. சி. ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லையாயின் அவர்கள் இலங்கையின் எந்தப் பாவத்திற்கும் சுற்றுலா மேற்கொள்ள அனுமதி கிடைக்கும் என்று சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய சுற்றுலா மேற்கொண்டுள்ள7வது தினத்தில் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில் அவர்கள் மீண்டும் கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அணைத்து சுற்றுலா பயணிகளும் இலங்கை வருவதற்காக விமான நிலையத்தில் பயணிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொண்ட பரிசோதனைகளில் கொவிட் 19 தொற்று உறுதியாகவில்லை என்பதையும் ஆவணம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply