திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

0

தெல்லிப்பழை காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதற்கமைய இவ்வாறு கைது செய்யப்பட நபரிடமிருந்து திருடப்பட்ட ஐ போன் ஒன்று, நாலு சைக்கிள்கள் உள்ளிட்ட பெறுமதியான பொட்ள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவற்துறையினர் குறிப்பிட்டனர்.

அத்துடன் சுன்னாகம் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதினை உடையவர்களே இவ்வாறு கைது செயப்படுள்ளனர்.

தெல்லிப்பழை காவற்துறை பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் இரண்டு நாள்களுக்கு முன்னர் திருட்டு இடம்பெற்றிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்ததுடன் திருட்டுப் பொருள்களையும் அவர்களிடம் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவருக்கும் வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புள்ளமை விசாரணைகள் தெரிய வந்துள்ள நிலையில் குறித்த விடயம்தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply