அதி வேகத்திலான சூரிய புயல் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக நாஸாவை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கமைய குறித்த சூரிய புயலானது மணிக்கு 16 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி நகர்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது..
இந்நிலையில் மின்சார விநியோக கட்டமைப்பு மற்றும் தொடர்பாடல் கட்டமைப்பு என்பன பாதிக்கக் கூடும் என சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த மூன்றாம் திகதி இந்த அதிவேக சூரியப் புயல் முதன்முறையாக கண்டறியப்பட்டதுடன் இது வினாடிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.