பொது மக்கள் அனைவரும் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாது விட்டால் மீண்டும் நாடு பூராகவும் பயண கட்டுப்பாடு விதிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய சுகாதார நெறிமுறைகள், வழிகாட்டல்களுக்கு கீழ் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டமைக்கு கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்தது காரணம் இல்லை எனவும் மாறாக நாட்டில் பொருளாதார நிலைமையைக் கருத்தில்கொண்டே பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



