வத்தள, எரிபத்த பகுதியில் வீட்டிற்குள் திருட வந்த நபர் ஒருவர் வீட்டார் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த நபரை இளைஞர்கள் இருவர் கிரிக்கெட் வெட்டினால் தாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.,



